யாகப்பா பள்ளிகளின் ஆண்டு விழா

தஞ்சை, மார்ச் 15: தஞ்சாவூர் யாகப்பா கல்வி குழுமத்தின் யாகப்பா இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் யாகப்பா இன்டர்நேஷனல் ரெஷிடென்ஷியல் பள்ளியின் (சிபிஎஸ்இ) 8வது ஆண்டு விழா, செங்கிப்பட்டி வளாகத்தில் நடந்தது. வின்சென்ட் தே பவுல் சபையின் அகில உலக தலைவர் ஜோசப் பாண்டியன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பரிசுகளை  இருதயமேரி பாண்டியன் வழங்கினார். திருச்சி மான்ட்போர்ட் பள்ளியின் தலைமையாசிரியர் சூசைராஜ், முன்னாள் காவல் உயரதிகாரி பொன்னிறைவன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் எல்கேஜி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின டிஸ்னிலான்ட்டை மையமாக கொண்டு பல்வேறு கேளிக்கை சித்திரங்களாக டோனால்ட் டக், டால்மேஷன், டின்கர் பெல், அலாவுதீன், டாய் ஸ்டோரி, பியூட்டி அன்ட் த பீஸ்ட் போன்ற பல்வேறு கதாபாத்திரங்களை கண்முன் காட்சிப்படுத்தினர். ஏற்பாடுகளை பள்ளி டிரஸ்டி மேரிஞானம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: