அதிராம்பட்டினம் பகுதியில் கொடி கம்பங்கள் அகற்றம் ேபரூராட்சி பணியாளர்கள் அதிரடி

அதிராம்பட்டினம், மார்ச் 15: அதிராம்பட்டினம் நகர பகுதியில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து ஆலோசனை நடத்தினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். இதைதொடர்ந்து நேற்று அதிராம்பட்டினம் பகுதியில் அமைத்திருந்த கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை, கல்லூரி முக்கம், பழஞ்செட்டிதெரு, சேர்மன்வாடி, வண்டிப்பேட்டை, பெரியகடைத்தெரு போன்ற பகுதியில் அனைத்து கட்சி கொடிகம்பங்களை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மேற்பார்வையாளர் வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் அகற்றினர். மேலும் விளம்பர பேனர்களும் அகற்றப்பட்டது.

Related Stories: