பேராவூரணி, மார்ச் 15: பேராவூரணியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. உதவி தேர்தல் அலுவலரும், முத்திரைத்தாள் கட்டண துணை ஆட்சியருமான கமலக்கண்ணன் தலைமை வகித்தார். பேரணியை தாசில்தார் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார். 50க்கும் மேற்பட்டடோர் இருசக்கர வாகனத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது ஜனநாயக கடமையென வலியுறுத்தி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கடைவீதி வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றனர். பேரணியில் தேர்தல் துணை தாசில்தார் யுவராஜ், ஆர்ஐக்கள் அசரப் அலி, சுப்பிரமணியன், விஏஓக்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.