விவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை, மார்ச் 15:  உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி(61), விவசாயி. இவரது மகன் பெருமாள் என்பவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் நாராயணசாமி(40) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் சம்பவத்தன்று இந்த முன்விரோதம் காரணமாக பெருமாள் திருநாவலூர் ஏரிக்கரை அருகில் செல்லும் போது அங்கு சென்ற நாராயணசாமி மற்றும் அவருடன் சென்ற பழனிமூர்த்தி(43), ஆறுமுகம்(36), பன்னீர்(20), ராஜசேகர்(26) ஆகிய 5 பேரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் தட்சணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: