தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு பெட்டி இயந்திரம் செயல் விளக்க பயிற்சி

கள்ளக்குறிச்சி, மார்ச் 15:  கள்ளக்குறிச்சி மக்களவை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு உட்பட்ட 92 மண்டலங்களுக்கான தேர்தல் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான வாக்கு பெட்டி இயந்திரம் பயன்படுத்துவது குறித்து செயல் விளக்க பயிற்சி கள்ளக்குறிச்சி ஏகேடி பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுசியாதேவி தலைமை தாங்கி வாக்கு பெட்டி இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளித்தார். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் கள்ளக்குறிச்சி காந்த், சங்கராபுரம் ரத்தினமாலா, ரிஷிவந்தியம் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியின் கூடுதல் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலசுப்ரமணியன் வரவேற்று மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பணி சம்பந்தமாக பயிற்சி அளித்Aதார். அப்போது வட்டாட்சியர்கள் கள்ளக்குறிச்சி தயாளன், சின்னசேலம் இந்திரா, சங்கராபுரம் பாண்டியன், மண்டல துணை வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி தேர்தல் துணை வட்டாட்சியர் குமரன் மற்றும் 92 மண்டலங்களுக்கான மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள், தேர்தல் உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: