முன்விரோத தகராறில் 3 பேர் கைது

மயிலம், மார்ச் 15:   மயிலம் அடுத்த பாதிராபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (60), விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வீரப்பன் (60) என்பவரின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

 இந்நிலையில் சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் மயிலம் சப்- இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் 4 பேர் மீது வழக்குப்பதிந்து கஜேந்திரன் உறவினர் முருகேசன் மகன் ரஜினி (38), வீரப்பன் ஆதரவாளர்கள் இருசப்பன் (35), ஏழுமலை (32) ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: