கிராம மக்கள் சார்பில் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டது

வத்திராயிருப்பு, மார்ச் 15: வத்திராயிருப்பு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கப்பட்டது. வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மகாராஜபுரம் கிராம மக்கள் சார்பில் பள்ளிக்கு பிளாஸ்டிக் குடம், சேர், கையேடு உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. முன்னதாக கல்வி சீர்வரிசை பொருட்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக எடுத்து வரப்பட்டது. சீர்வரிசை பொருட்களை தலைமை ஆசிரியர் டென்சிங்காந்தி, வட்டார கல்வி அலுவலர் மலர்கொடி, வட்டார மேற்பார்வையாளர் ரத்தினசாமி ஆகியோர் பெற்று கொண்டனர்.

சிவகாசி: வெம்பக்கோட்டை தாலுகா அலமேலுமங்கைபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் பள்ளிச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளிக்கு தேவையான குடம், வாளி, நீர் பாய்ச்சும் குழாய், சோப்பு, துடைப்பம், அண்டா, தாம்பாளம் உள்ளிட்ட பொருட்களை பள்ளி மாணவர்கள் பயன்படுத்த சீராக வழங்கினர்.

Related Stories: