ராகவேந்திரர் ஜெயந்தி விழா

தென்காசி, மார்ச் 15:  தென்காசியில் ராகவேந்திரர் சேவா டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் ராகவேந்திரர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு நேற்று முன்தினம் 424வது ஜெயந்தி விழா, தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் நடைபெற்றது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட ராகவேந்திரரின் உருவப்படத்திற்கு முன்பு கலைஞாயிறு முனீஷ்வரன் மிஸ்டிக்செல்வம் தலைமையில் அன்னை கலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: