சங்கரன்கோவில், மார்ச் 15: சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள ஏவிகே இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் சீனியர் செகண்டரி(சிபிஎஸ்இ) பள்ளியில் 2019ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல் விண்ணப்ப படிவத்தை பள்ளி சேர்மன் அய்யாத்துரை பாண்டியன் வழங்கினார். இதில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பள்ளியில் கேஜி முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகிறது.