வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது

நெல்லை, மார்ச் 15: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் ஒரு செல்போன் எண்ணில் இருந்து மர்ம நபர் ஒருவர் தனது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் சங்கரன்கோவிலை சேர்ந்த மாரிதுரை என்பதும், முதுநிலை பட்டதாரி வாலிபர் என்பதும், இளம் பெண்ணுடன் கல்லூரியில் படித்தவர் என்பதும் தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் மாரிதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: