பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் மூணாறு அருகே ஆசிரியர் கைது

மூணாறு,மார்ச் 15: 1மூணாறு அருகே வட்டவடை பகுதியில் பிளஸ் 2 மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் முருகேசனை தேவிகுளம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .மூணாறு அருகே வட்டவடை பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முருகேசன்(50) என்பவர் ஆசிரியராக உள்ளார். இப்பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவிக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மாணவியின் பெற்றோர் இவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி  பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி அனுப்  உத்தரவின் அடிப்படையில், தேவிகுளம் எஸ்ஐ திலீப்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் முருகேசன்(50) என்பது தெரிய வந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .

Related Stories: