காரைக்குடி அருகே முதியவர் மர்மச்சாவு

காரைக்குடி, மார்ச் 15: காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை உய்யவந்த அம்மன் கோயில் அருகில் நேற்றுமுன்தினம், காலை சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் அசைவின்றி கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சாக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று சாக்கோட்டை போலீசார் ஆய்வு செய்த போது, முதியவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இறந்தவர் ஊதா கலர் அரைக்கை சட்டையும், வெள்ளை வேஷ்டியும் கட்டி இருந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் முதியவரின் பிரேதத்தை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: