ராமநாதபுரம், மார்ச் 15: நேற்று துவங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 356 பேர் தேர்வு எழுத வரவில்லைதமிழகம் முழுதும் கடந்த 1ம் தேதி முதல் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் முதல் 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 17,326 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர்.