10ம் வகுப்பு தேர்வு; 356 பேர் ஆப்சென்ட்

ராமநாதபுரம், மார்ச் 15: நேற்று துவங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 356 பேர் தேர்வு எழுத வரவில்லைதமிழகம் முழுதும் கடந்த 1ம் தேதி முதல் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் முதல் 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 17,326 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 356 பேர் வரவில்லை. முதல் நாளான நேற்று தமிழ் பாட தேர்வு நடந்தது. ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையத்தை கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டார். மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் 75 மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Related Stories: