மதுரை, மார்ச் 15: மதுரை மாவட்டத்தில் திருடுபோன 25 செல்போன்களை மீட்டு உரியவர்களுக்கு எஸ்பி மணிவண்ணன் வழங்கினார். மதுரை மாவட்ட காவல்துறை சைபர் கிளப்பின் மூலம் பல்வேறு சைபர் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் மாவட்ட காவல் நிலையங்களில் பதிவான செல்போன் திருட்டு மற்றும் செல்போன் தொலைந்த வழக்குகள் சைபர்கிளப்பின் மூலம் ரூ.4 லட்சத்து 34 ஆயிரத்து 761 மதிப்புள்ள 25 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை எஸ்பி மணிவண்ணன் உரிய நபர்களிடம் வழங்கினார். மேலும் சமீபகாலமாக வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் திருட்டுகள் நடந்தது. அதுபோன்ற வழக்குகளில் இம்மாதத்தில் மட்டுமே ரூ.55 ஆயிரத்தை மீட்டு உரியவர்களுக்கு வங்கி கணக்கில் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் எஸ்பி தெரிவித்தார்.