தென்னை மரம் ஏறியவர் தவறி விழுந்து பலி

மேலூர், மார்ச் 15: மேலூர் அருகே பால்குடியை சேர்ந்தவர் தியாகராஜன் (35). மேலூரில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் செட்டியார்பட்டி பகுதிக்கு சென்றார். அங்கு அவர் ஒரு தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தியாகராஜன் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தியாகராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: