திருமங்கலம், மார்ச் 15: திருமங்கலம் பகுதி கிராமங்களில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 10ம் தேதி முதல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். திருமங்கலம் நகரில் உள்ள கொடிக்கம்பங்களில் கொடிகள் அகற்றப்பட்டன. மேலும் தலைவர்கள், படங்கள் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. நான்கு வழிச்சாலை, சாலை தடுப்பு சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.