சின்னாளபட்டி அருகே மருமகள் திட்டியதால் மாமனார் விஷம் குடித்து தற்கொலை

செம்பட்டி, மார்ச் 15: சின்னாளபட்டி அருகே திட்டிய மருமகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மாமனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.சின்னாளப்பட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(60). இவரது மகன் ஜெயராம். இவருக்கு கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஜெயா என்பவருடன் திருமணம் நடந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடமாக பிரிந்து வாழ்கின்றனர்.இதனிடையே கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜெயராம் தனது உறவு பெண்ணான விருவீட்டை சேர்ந்த மாலதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனை கேள்விப்பட்ட முதல் மனைவி ஜெயா, இரண்டு தினங்களுக்கு முன்பு கலிக்கம்பட்டிக்கு வந்தார். மாமனார் பாண்டியராஜனிடம் இரண்டாவது திருமணம் குறித்து கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து பாண்டியராஜன் நேற்று முன்தினம் சின்னாளபட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், எனது மகனின் முதல் மனைவியிடம் விவகாரத்து பெற்ற பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டான். இதற்கு முதல் மனைவி வந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு போலீசார் விவாகரத்து பெற்றதற்கான ஆதாரத்தை கொண்டு வந்து புகார் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது.ஆனால் போலீசார் புகாரை வங்க மறுப்பதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் கூறி பாண்டியராஜன் நேற்று வீட்டில் விஷம் குடித்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: