தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் தங்கும் விடுதிகளை அரசியல் கட்சியினர் பயன்படுத்த தடை செலவு கணக்கில் வரவு வைக்கப்படும்: தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை

திருவாரூர்,மார்ச்15: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் திருமண மண்டபம், தங்கும் விடுதிகளை அரசியல் கட்சியினர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, தேர்தல் செலவு கணக்கில் வரவு வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாடாளுமன்ற பொது தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடை பிடித்தல் தொடர்பாக திருமண மண்டபம், திரையரங்கம், தங்கும்விடுதி, அடகுகடை மற்றும் வட்டிக்கடை, அச்சக உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் உத்தரவு வழங்கியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது; தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இதன்படி, திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்கள் கூட்டங்கள் மற்றும் பிரசாரம் செய்ய பயன் படுத்தினால் அதற்கான செலவுத் தொகை அவர்களது தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.இதன் விபரத்தை தினந்தோறும் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இதே போன்று நகை அடகு கடை மற்றும் வட்டிக் கடை உரிமையாளர்கள் தங்களது வரவு செலவு விபரங்கள் அடங்கிய தினசரி அறிக்கைகளை சம்மந் தப்பட்ட தொகுதியில் உள்ள அலுவலருக்கு நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கூட்டங்கள் நடத்தவும் மற்றும் தேர்தல் பிரசாரம் செய்வதற்கும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் பயன்படுத்தினால் அதுகுறித்த செலவுத் தொகை விபரங்களை அச்சக உரிமை யாளர்கள் தினமும் சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் சம்மந்தப்பட்ட நபர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் உரிம விதிகளை தவாறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: