திருவாரூர், மார்ச் 15: திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரும். கலெக்டருமான ஆனந்த் தலைமையில் நேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் கலெக்டர் ஆனந்த் பேசுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் 100 சதவிகித வாக்களிப்பது என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று (நேற்று) உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.