100 சதவீதம் வாக்களிப்பு: அலுவலர்கள் உறுதிமொழி

திருவாரூர், மார்ச் 15:  திருவாரூர் மாவட்டத்தில்  100 சதவீதம் வாக்களிப்பது என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு ஊரக  வாழ்வாதார இயக்கம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும்  அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரும். கலெக்டருமான ஆனந்த் தலைமையில் நேற்று  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் கலெக்டர் ஆனந்த் பேசுகையில், வரும்  நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் 100 சதவிகித வாக்களிப்பது என்பதை  வலியுறுத்தி தேர்தல்  விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று  (நேற்று) உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில்  100 சதவீத வாக்களிப்பினை உறுதி செய்வதற்கு அலுவலர்களும், வாக்காளர்களும்  முழு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும்  தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் அறியும் வண்ணம் வட்டார அளவில் விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர்  தெரிவித்துள்ளார்.  நிகழ்ச்சியில் டிஆர்ஓ பொன்னம்மாள், ஊரக  வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீதேவி, தேர்தல் தாசில்தார் சொக்கநாதன் மற்றும் அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

Related Stories: