நாகர்கோவில், மார்ச் 15: குமரி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை 23 ஆயிரத்து 986 பேர் எழுதினர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ் 1 தேர்வுகளும் மார்ச் 6ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று பிற்பகல் தமிழகம் முழுவதும் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் தக்கலை கல்வி மாவட்டத்தில் மாணவிகள் 3314, மாணவர்கள் 3258 என்று 6572 பேரும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் மாணவிகள் 2414, மாணவர்கள் 2462 என்று 4876 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் மாணவிகள் 3939, மாணவர்கள் 3974 பேரும், திருவட்டார் கல்வி மாவட்டத்தில் மாணவிகள் 2374, மாணவர்கள் 2251 என்று 4625 பேரும் என மொத்தம் 12,041 மாணவிகளும், 11945 மாணவர்களும் என்று மொத்தம் 23 ஆயிரத்து 986 பேர் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.