அழகப்பபுரம் அருகே துணிகரம் ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

அஞ்சுகிராமம், மார்ச் 15:  அழகப்பபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் ஐந்தரை பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார். நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் மனைவி எழிலரசி (33). அழகப்பபுர அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை 9.30 மணியளவில் பள்ளியில் இருந்து அழகப்பபுரம் பஸ் நிலையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அழகப்பபுரம் செங்குளம் கரையில் அவர் சென்ற போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்  எழிலரசியின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டார். செயினை பறித்த போது பைக்கில் இருந்து கீழே விழுந்த எழிலரசி படுகாயமடைந்தார். அவர் அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது பற்றி அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: