பரிசளிப்பு விழா

கோவில்பட்டி, மார்ச் 15: கோவில்பட்டியில் ஜேசிஐ அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு தங்கமங்கை 2019 எனும் தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி வக்கீல் சொர்ணலதா தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். ஜேசிஐ மங்கையர் தலைவி ஜெயவிக்னேஷ் வரவேற்றார். விழாவில் பெண்களுக்கான கோலப்போட்டி, சமையல், பூ ஆபரணங்கள வடிவமைத்தல், நடனம், நகைச்சுவை கில்லாடிகள், கண் கவரும் அட்டைகள் வடிவமைப்பு போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் கோவில்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற பவித்ரா லிங்கத்தை பாராட்டி தங்கமங்கை விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மகளிருக்கு டாக்டர் சுஜாதா பரிசுகளை வழங்கினார். மகளிரணி மண்டல ஒருங்கிணைப்பாளர் வகிதா, பொருளாளர் முரளிகிருஷ்ணன், சியாமளா செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜேசிஐ மங்கையர் செயலாளர் நிகிதா வெங்கடேஷ் நன்றி கூறினார்.

Related Stories: