நாகை, மார்ச் 15: நாகையை அடுத்த நாகூர் பண்டக சாலைத் தெருவில் வட மாநில இளைஞர்களால் அனுமத்திக்கப்படாத கலர்களை கொண்டு ஐஸ்கிரீம் மற்றும் பஞ்சுமிட்டாய் தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரண்டு வீடுகளில் வைத்து ஐஸ்கிரீம் தயாரிப்பது தெரியவந்தது. தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற நிலையில் இல்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும் உணவு பொருள் தயாரிக்க, விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெறாமல் இருந்ததும் தெரியவந்தது.