பொள்ளாச்சி சம்பவம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சீர்காழி, மார்ச் 15: சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே இளைஞர் சங்கம் சார்பில் பொள்ளாச்சியில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வழக்கறிஞர் சுந்தரய்யா, ஜெகசண்முகம், கல்யாணசுந்தரம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தின்போது குற்றவாளிகள் என எழுதப்பட்ட ஒரு பொம்மையை தூக்கில் தொங்க விடப்பட்டிருந்து.

Related Stories: