மயிலாடுதுறை மார்ச் 15: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் குத்தாலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் பேருந்துநிலையம் அருகே தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் பொன்குமார் தலைமையில் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், ஜெகமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில அரசைக் கண்டித்தும் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.