சீர்காழி அருகே திருப்பங்கூரில் மாந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த சாராய கேன்கள் தோண்டி எடுப்பு இருவர் கைது

சீர்காழி மார்ச் 15: சீர்காழி அருகே திருப்பங்கூரில் மாந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த சாராய கேன்களை போலீசார் தோண்டி எடுத்து, இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் திருப்பங்கூர் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நாகை எஸ்.பி. விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் திருப்பங்கூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பங்கூர் முத்து என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் சாராய கேன்கள் மண்ணில் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து போலீசார் புதைத்து வைத்திருந்த சாராய கேன்களை தோண்டி எடுத்தனர்.  அதில் 18 கேன்களில் தலா 35 லி வீதம் 280 லி சாராயமும், 500 பாக்கெட் சாராயமும் இருந்தது.  இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பங்கூரில் மெயின்ரோட்டில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் வினோத் (28), மன்னிப்பள்ளம் மெயின்ரோட்டில் வசிக்கும் முனுசாமி மகன் மார்க்கோனி (52) ஆகியோரை கைது செய்தனர். மேலும், மாந்தோப்பில் சாராய கேன்களை புதைத்து வைத்திருந்த முத்து என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: