சீர்காழி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனார் கைது

சீர்காழி மார்ச் 15: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் ரயிலடி தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் கதிரவன் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக அவரது பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரா கதிரவனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: