நொச்சிக்குளம் அரசு பள்ளிக்கு கல்விசீர் கிராம மக்கள் வழங்கினர்

பாடாலூர், மார்ச்14: ஆலத்தூர் தாலுகா நொச்சிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குகல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.  ஆலத்தூர் தாலுகா நொச்சிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தேவையான கணினி, நாற்காலி, தண்ணீர் பாத்திரங்கள் தலைவர்களின் படங்கள்,வாளி உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கும் விழா நடைபெற்றது.  நிகழ்ச்சியில்  கிராம முக்கிய பிரமுகர்கள்  உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீராக வழங்கினர். பள்ளியின் தலைமையாசிரியர்   ராஜேந்திரன்   கல்வி சீராக வழங்கிய பொருட்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில்  ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர் சாந்தப்பன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்  பன்னீர்செல்வம் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: