பெரம்பலூர், மார்ச் 14: கேந்திர வித்யாலயா பள்ளியில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வு மையங்களை பெரம்பலூர் கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2ம்தேதி முதல் ஏப்ரல் 2ம்தேதி வரை நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ஆல்மைட்டி வித்யாலயா, ஹேன்ஸ் ரோவர், கோல்டன்கேட்ஸ் பள்ளிகள் மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 111 மாணவ, மாணவிகள் முதன்முதலாக பெரம்பலூரிலுள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதி வருகின்றனர். மேலும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வை கேந்திர வித்யாலயா பள்ளியை சேர்ந்த 28 மாணவ, மாணவிகளும் இந்த தேர்வு மையத்தின் மூலமாக எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.