சிவகாசி, மார்ச் 14: சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லைனில் குப்பைகளில் வைக்கப்படும் தீயால், புகை மூட்டம் உருவாகி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லைனில் தொழில்பேட்டை உள்ளது. இந்த தொழில்பேட்டையை சுற்றி சுற்றுக்சுவர் இல்லை. இப்பகுதிகளில் மாமிசக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுகின்றனர். இதில், சிலர் தீ வைத்து விடுகின்றனர். குறிப்பாக காலை வேளையில் தீ வைப்பதால் பெரும் புகை மூட்டம் உருவாகிறது. இதனால், சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த சாலை வழியாகச் செல்லும் மாணவ, மாணவியர் பெரும் சிரமப்படுகின்றனர்.