தேனி பாராளுமன்றத் தொகுதியில் சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிகாரிகள் நியமனம்

தேனி, மார்ச் 14: தேனி பாராளுமன்றத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேனி பாராளுமன்றத் தொகுதியில் சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் சோழவந்தான், உசிலம்பட்டி மதுரை மாவட்டத்திலும், ஆண்டிபட்டி, பெரியகுளம்,போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் தேனி மாவட்டத்திலும் உள்ளன.தேனி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குமாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சாந்தி, ஆண்டிபட்டி வட்டாட்சியர் பாலசண்முகம் ஆகியோரும், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரிதா, பெரியகுளம் வட்டாட்சியர் சுந்தர்லால், ஆகியோரும், போடிசட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயினி, போடி வட்டாட்சியர் மணிமாறன் ஆகியோரும், கம்பம் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக உத்தமபாளையம் சார்பு ஆட்சியர் வைத்தியநாதன், உத்தமபாளையம் வட்டாட்சியர் சத்யபாமா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: