தேனி, மார்ச் 14: தேனி எஸ்.பி அலுவலகத்தில் தேர்தல் விதிமீறும் வகையில் அறிவிப்பு பலகையில் ஆளும் கட்சியினர் புகழ்பாடும் புகைப்படங்கள் அகற்றப்படாமல் உள்ளது.இந்திய நாடாளுமன்ற 17வது பொதுத் தேர்தல் பல கட்டங்களாக நடக்க உள்ளது. தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிறு அன்று மாலை அறிவித்தது. தேர்தல் தேதி அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.தேர்தல் நடத்தை விதிகள்படி, அரசு அலுவலகங்களில் எந்தவொரு அரசியல் கட்சித் தலைவர் புகைப்படங்கள் அடங்கிய போட்டோக்களோ, நோட்டீசோ, பேனரோ, சுவர் விளம்பரமோ இருக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களில் இருந்த ஆளும் கட்சியினரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. தேனி கலெக்டர் அலுவலக போர்டிகோவில் செய்தி, மக்கள் தொடர்பு துறை மூலம் வைக்கப்பட்டிருந்த புகைப்பட போர்டில் இருந்த ஆளும் கட்சியை சேர்ந்த அரசு பதிவியில் இருந்போரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு விட்டன.