மாவட்டத்தில் 16 ஆயிரத்து 136 பேர் எழுதுகின்றனர் தேர்தல் விதி மீறி எஸ்பி அலுவலகத்தில் ஆளும் கட்சியினர் புகைப்படங்கள்

தேனி, மார்ச் 14: தேனி எஸ்.பி அலுவலகத்தில் தேர்தல் விதிமீறும் வகையில் அறிவிப்பு பலகையில் ஆளும் கட்சியினர் புகழ்பாடும் புகைப்படங்கள் அகற்றப்படாமல் உள்ளது.இந்திய நாடாளுமன்ற 17வது பொதுத் தேர்தல் பல கட்டங்களாக நடக்க உள்ளது. தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிறு அன்று மாலை அறிவித்தது. தேர்தல் தேதி அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.தேர்தல் நடத்தை விதிகள்படி, அரசு அலுவலகங்களில் எந்தவொரு அரசியல் கட்சித் தலைவர் புகைப்படங்கள் அடங்கிய போட்டோக்களோ, நோட்டீசோ, பேனரோ, சுவர் விளம்பரமோ இருக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களில் இருந்த ஆளும் கட்சியினரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. தேனி கலெக்டர் அலுவலக போர்டிகோவில் செய்தி, மக்கள் தொடர்பு துறை மூலம் வைக்கப்பட்டிருந்த புகைப்பட போர்டில் இருந்த ஆளும் கட்சியை சேர்ந்த அரசு பதிவியில் இருந்போரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு விட்டன.

விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டிய போலீஸ் துறையில் அலட்சியப்போக்கு காணப்படுகிறது. தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று வரை தேர்தல் விதிப்படி, எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் இன்னமும் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆளும் கட்சியின் புகழ்பாடும் புகைப்படங்கள் அகற்றப்படாமல் உள்ளது.மாவட்டம் முழுவதும் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கட்சியினர் வைத்துள்ள பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டும், சுவர்விளம்பரங்கள் அழிக்கப்பட்டும் வரும் நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய எஸ்.பி அலுவலகத்தில் ஆளும் கட்சிக்கு விசுவாசமாக அறிவிப்பு பலகையில் உள்ள படங்கள் அகற்றப்படாமல் உள்ளது.

Related Stories: