10ம் வகுப்பு மாணவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனை

பெரியகுளம், மார்ச் 14: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான 13 மணி நேரம் ஹரேராம ஹரே கிருஷ்ண மகா மந்திர கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.மாணவ, மாணவியர் மன உறுதியுடன் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் தேர்வினை எழுதவும், ஞாபக சக்தியுடன் சரியான பதில்களை எழுத மாணவ, மாணவிகள் விரும்பிய மேற்படிப்பு படித்து சாதனை புரிந்திட கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டது.அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை குளோபல் ஆர்கனைசேசன் பார் டிவைனிடி பார் இந்தியா டிரஸ்ட் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: