தீயால் கருகிய மின்வயர்கள்

ராமேஸ்வரம், மார்ச் 14: பாம்பன் சாலை பாலம் வழியாக செல்லும் மின்வயர்கள் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளுக்கு மண்டபத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான மின்வயர்கள் பாம்பன் சாலை பாலத்தின் பிளாட்பார்ம் வழியாக செல்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த மின்வயர்கள் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. தகவலறிந்தது ராமேஸ்வரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் மின்வயர்கள் முழுவதுமாக கருகி போய்விட்டன.இதனால் பாம்பன் முழுவதும் மின்விநியோகம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளது. பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் இந்த திடீர் மின்தடையால் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.மின் கசிவால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்றும் மின்வயர்கள் முழுவதும் மாற்றப்பட்ட பிறகே பாம்பனில் மின்விநியோகம் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பாம்பன் சாலை பாலத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: