ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 14: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அன்னை நகர் குருனி பச்சேரி என்ற இடத்தில் அரசு ஆதிதிராவிட மாணவியர் விடுதி இருந்தது. அந்த விடுதி கட்டிடம் பழுதடைந்ததால் அதன் அருகே அரசு புதிய கட்டிடம் கட்டி விடுதி நடந்து வருகின்றது. பழைய கட்டிடத்தை சீர் செய்யாமலோ அல்லது அழிமானம் செய்யாமலோ அப்படியே விட்டு விட்டனர்.இப்பகுதியில் உள்ள சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் அந்த கட்டிட பகுதியில் ஓடி ஆடி விளையாடுகின்றனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உள்ளே செல்கிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சிலாப்பு பகுதிகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் உயிர் சேதம், பொருள் சேதம் போன்ற அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்னரே இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.