ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 14: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அன்னை நகரில் உள்ள பழைய மாணவி விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனை சரி செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அன்னை நகர் குருனி பச்சேரி என்ற இடத்தில் அரசு ஆதிதிராவிட மாணவியர் விடுதி இருந்தது. அந்த விடுதி கட்டிடம் பழுதடைந்ததால் அதன் அருகே அரசு புதிய கட்டிடம் கட்டி விடுதி நடந்து வருகின்றது. பழைய கட்டிடத்தை சீர் செய்யாமலோ அல்லது அழிமானம் செய்யாமலோ அப்படியே விட்டு விட்டனர்.