பயிர் காப்பீட்டை அரசே செலுத்த வேண்டும்

திருமங்கலம், மார்ச் 14: திருமங்கலத்தில் பயிர் காப்பீட்டிற்கான பங்குத்தொகையை அரசே செலுத்த கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருமங்கலம் தாலுகா அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில தலைவர் குணசேகரன் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் ஜெயக்குமார், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பயிர் காப்பீட்டில் விவசாயிகளின் பங்குத்தொகையை அரசே செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: