திருமங்கலம், மார்ச் 14: திருமங்கலம் புல்லமுத்தூர் அரசு பள்ளியில் அறிவியல் தினவிழா, விளையாட்டு விழா, கணினி வழிக்கல்வி மையம் துவக்கவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பள்ளியின் எஸ்எம்சி அமைப்பின் தலைவர் சபரிமாலா தலைமை வகித்தார். தலைமையாசிரியர கனிமுத்து வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திருமங்கலம் வட்டார கல்வி அலுவலர்கள் சாந்தி, பேபி கலந்து கொண்டனர். கபடி, கோகோ, நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.