பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் மரண தண்டனைதான் முடிவு மதுரை ஆதீனம் வலியுறுத்தல்

மதுரை, மார்ச் 14: பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மதுரை ஆதீனம் வலியுறுத்தியுள்ளார்.மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கை, ‘பாலியல் துன்புறுத்தல் எங்கு நடந்தாலும், அதிமுகவோ, திமுகவோ மற்றைய கட்சிகளோ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகின்றார்கள். இதில் எந்த கட்சிக்கும் கருத்து மாறுபாடு இல்லை. இப்படிப்பட்ட வன்முறை சம்பவங்களை அழித்து ஒழிக்க வேண்டுமானால் அரபு நாடுகள் சட்டத்தை இந்திய திருநாட்டில் அமல்படுத்த வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினோம். அதனையே மீண்டும் வலியுறுத்துகிறோம். அதைத்தவிர வேறு வழியே இல்லை. பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்கள் ஏராளமானோர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உரிய வழிவகைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகின்ேறன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: