சத்தியமங்கலம், மார்ச் 14: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், வனப்பகுதியில் உள்ள ஓடைகள், பள்ளங்கள், தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியது.இதன்காரணமாக, வனவிலங்குகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வனப்பகுதியில் உள்ள தற்காலிக தொட்டிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரை லாரியில் கொண்டு சென்று நிரப்புமாறு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நாகநாதன் உத்தரவிட்டார்.