மினி பஸ் மோதி தொழிலாளி பலி

திருப்பூர், மார்ச் 14:  திருப்பூர் கே.வி.ஆர்.நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (38). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் கே.வி.ஆர்.நகர் வழியாக சென்றபோது, அந்த வழியாக வந்த மினி பஸ் பைக்கு மீது மோதியது. இதில் சிவானந்தம் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சிவானந்தம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: