நகை பறித்த வழக்கில் குற்றவாளிக்கு சிறை

காங்கயம், மார்ச் 14:  காங்கயம் அடுத்த காந்தி நகரில் டீ கடை வைத்து நடத்தி வந்தவர் ஆச்சியம்மாள் (75). இவர் கடந்த 28.10.2014 அன்று இரவு 9 மணிக்கு கடையில் இருந்த போது, அங்கு பைக்கில் வந்த ஒருவர் சிகரெட் கேட்பது போல ஆச்சியம்மாளின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்று விட்டார். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஊத்துக்குளி ஆர்.எஸ்.பகுதியை சேர்ந்த சங்கர் (40) என்பவரை கைது செய்து, நகையை மீட்டனர்.

  இந்த வழக்கு காங்கயம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன், குற்றவாளி சங்கருக்கு 5 மாதம் சிறை தணடனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: