காட்டேரி பூங்காவில் பராமரிப்பு பணி தீவிரம்

குன்னூர், மார்ச் 14: குன்னூரில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. இதில் காட்டேரி பூங்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மே மாத சீசனுக்காக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்  மலர் செடி நாற்றுகள் நடப்பட்டது. இதை தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் நடப்பட்ட நாற்றுகளை பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடும் வெயில் நிலவி வருவதால்  நாற்றுகள் கருகாமல் இருக்க தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

Related Stories: