பந்தலூர், மார்ச் 14 : பந்தலூர் அருகே உள்ள ேதயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகளால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கோடை வெயிலில் தாக்கம் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வர துவங்கியுள்ளது. இந்நிலையில், பந்தலூர் கூவமூலை, அத்திக்குன்னு, தேவாலா,சேரம்பாடி, அய்யன்கொல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யானைகள் முகாமிட்டு வருவதால் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.