வாக்குச் சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

ஊட்டி, மார்ச் 14: ஊட்டி சட்டமன்றத்திற்குட்பட்ட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊட்டி ஜோசப் மேல்நிலைப்பள்ளி, பிங்கர்போஸ்ட் தெரசா பள்ளி, ஆர்.கே.புரம் துவக்கப்பள்ளி, ஹோபார்ட் பள்ளி மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு சாவடி மையத்தில், அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.  இந்த ஆய்வின் போது, வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், ஊட்டி தாசில்தார் மகேந்திரன், நகராட்சி கமிஷ்னர் நாராயணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: