இ.கம்யூ., நாடாளுமன்ற பணிக்குழு கூட்டம்

சத்தியமங்கலம், மார்ச் 14: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற பணிக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமை வகித்தார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 294 வாக்குச்சாவடிகளிலும், வாக்குச் சாவடி முகவர்களை நியமிப்பது குறித்து  விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இ.கம்யூ., மாநில துணைச்செயலாளர் சுப்பராயன், தேசியக் குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் மாதேஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினர் மோகன்குமார், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், ஸ்டாலின் சிவக்குமார், சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: