ஈரோடு, மார்ச் 14: ஈரோடு மாவட்டம் முகாசி அனுமன் பள்ளியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கனகராஜ் (37). இவர் பி.ஏ., பி.எட் படித்து விட்டு சிறுவயதிலேயே மண்பாண்ட தொழில் மீது கொண்ட ஆர்வத்தால் தனது தொழிலை செய்ய தொடங்கினார்.
அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்க பல புதுமைகளை புகுத்தி உள்ளார். குறிப்பாக குக்கர், தண்ணீர் குடுவை, தயிர்சட்டி, அணையா விளக்கு போன்றவற்றை தயாரித்துள்ளார். மண் பாண்ட தொழிலில் இவரது சிறப்பான படைப்புகளை பாராட்டி தமிழ்நாடு பூம்புகார் கைவினை பொருட்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி கழகத்தின் சார்பில் மண்பாண்ட தொழிலில் சிறந்த கைவினை பொருட்கள் தயாரித்ததற்காக தொழிலாளி கனகராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.