ஈரோடு, மார்ச் 14: ஈரோட்டில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் வலுவூட்டல் பயிற்சி காந்திஜி ரோட்டில் உள்ள அரசுப்பள்ளியில் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி துவங்கி வைத்தார். இதில், மாநில அளவில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினர். இக் கூட்டத்தில், அரசு மற்றும் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியம், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் 98 பேர் கலந்து கொண்டனர்.