தம்மம்பட்டி அருகே 10 நாட்களாக மூடப்படாத பள்ளம்

தம்மம்பட்டி, மார்ச் 14: தம்மம்பட்டி அடுத்த உடையார்பாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டிய குழியை, 10 நாட்களாக மூடாமல் விட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி உடையார்பாளையம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பொதுத்துறை வங்கியின் முன்பு சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழுது நீக்க குழி தோண்டியவர்கள் பணி முடிந்து 10 நாட்கள் ஆகியும், இன்று வரை குழியை மூடாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி, குழியில் விழுந்து அடிபடுகின்றனர். இந்த குழியை மூடக்கோரி, பல முறை தம்மம்பட்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: