அரூர், மார்ச் 14:அரூர் கோபிநாதம்பட்டி கூட்ரோடு, புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு நடக்கும் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. மாநிலம் முழுவதிலிருந்தும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடு ₹22,350 முதல் ₹48,500 வரையும், ஆடு ₹4,500 முதல் ₹8,500 வரையும் விற்பனையானது. மொத்தம் ₹30 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.